
முத்தான முழுநிலவைக்காட்டி எனைத்
தாலாட்டித் தூங்கவைத்துக் கொண்டிருந்தாள் எனது தாய்.
கண்கள் செருகியது, சுகமான தென்றல் கட்டித் தழுவியது.
அந்த நொடி அத்தாலாட்டும் நின்றுபோனது
கணங்களைத் திறந்து பார்த்தபொழுது
தாயும் இல்லை அவள் தாலாட்டும் இல்லை
அப்பொழுது
ரயில் தன் நிலையத்தை வந்தடைந்திருந்தது.
ஜன்னலின் வழியே எட்டிப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது
முத்தான முழுநிலவு ...