Tuesday, December 7, 2010

என்ன இல்லை இந்த உலகத்தில் ???



கடலுண்டு வானுண்டு
நீல நிறமுண்டு
நிலவுண்டு வெளிர் நிறமுண்டு
பச்சை புல்வேளியுண்டு
சமவேளியுண்டு
நஞ்சையுண்டு புஞ்சையுண்டு
மழையுண்டு சாரலுண்டு
அருவியுண்டு
நீரின் ச்பரிசமுண்டு
மலைகளுண்டு குன்றுகளுண்டு
மாந்தர்களுண்டு
மனிதமுண்டு
குழந்தைகளுண்டு
கள்ளமில்லா சிரிப்புண்டு
பெண்களுண்டு நாணமுண்டு
ஆண்களுண்டு வீரமுண்டு
கல்லுரியுண்டு இளமையுண்டு
நூலகமுண்டு நல்லரிவுண்டு
பெரியவர்களுண்டு அனுபவமுண்டு
இவ்வளவு அழகான பக்கங்களுடைய இந்த உலகத்தில்
சில அழுக்கு பக்கங்களும் உள்ளன
அதில் வன்முரையுண்டு
பாவமுண்டு குற்றமுண்டு
எழ்மையுண்டு பசியுண்டு
சுயநலமுண்டு மனித மிருகங்களுமுண்டு ...

No comments:

Post a Comment