Tuesday, December 7, 2010

இந்த கால இளைஞர்கள் ...




ஆர்ப்பாட்டமான காலை வேளையில் ...
வேர்த்து விறுவிறுத்த படி பேருந்தினுள் ஏறினேன் ...
என் ஐம்பது வயது உடம்புக்கு எதை பார்த்தாலும் எரிச்சல்
அதுவும் ...
காலியாக இருந்த பேருந்தில் உள்ளே ஏறாமல்
படியில் தொங்கிகொண்டிருக்கும் இந்த கால இளைஞர்களை பார்த்து ...
அதை பார்த்தும் ரசித்தும் வருகிற இளம் பெண்களை பார்த்து ...
அந்த காலத்தில் நாங்கள் எவ்வளவு ஒழுக்கமாக ...
ஆசைகள் இருந்தாலும் மனதிற்குள் பூட்டி வைத்துக்கொண்டு ...
இந்த காலத்து இளைஞர்களை சுத்தமாக பிடிக்கவில்லை ...
நினைத்துக்கொண்டே இருக்கும்போது கர்பிணி ஒருத்தி கீழே விழுந்தாள் ...
எனகென்ன என்றிருந்தேன் நான் ...
படியில் தொங்கிகொண்டிருந்தவர்கள் பதறியடித்து ஓடி வந்து ...
அவளை தாங்கி பிடித்தார்கள் ...
அந்த காலத்தில் இதே பேருந்து பயணத்தில் மிக ஒழுக்கமாக இருந்த நான் ...
இதை மட்டும் செய்ததில்லை

4 comments: